News March 25, 2024

வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணி

image

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் இன்று அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை ஆட்சியர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் சங்கீதா ஆணையர் சித்ராசோனியா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் புவனா ஆகியோர் கலந்து கொண்டனர். 

Similar News

News December 9, 2025

திருவாரூர்: இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

image

கூத்தாநல்லூர் நகர பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற கூத்தாநல்லூர் (ரேடியோ பார்க்) பெண்கள் மேல் நிலை பள்ளியில், வரும் (13.12.2025) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, 17 மருத்துவ துறை சார்ந்த மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொது மருத்துவம் அறுவை சிகிச்சை எலும்பு முறிவு முதலிய சிகிச்சைகளை பெறலாம்.

News December 9, 2025

திருவாரூர்: கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சமூக நல்லிணக்கத்திற்காக கபீர் பிரஸ்கார் விருது குடியரசு தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. கலவரம் மற்றும் வன்முறை ஆகியவைகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் திருவாரூர் மாவட்டத்தில் இருப்பின் இணையதளம் வாயிலாக 15.12.2025குள் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகிற 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!