News April 6, 2025
வாகன விபத்தில் இளைஞர் பலி

ஓசூர் அருகே பேரண்டபள்ளி இருந்து தொரபள்ளி செல்லும் சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்ற பைரமங்களத்தை சேர்ந்த வெங்கடேஷ் 26 என்பவர், தொரபள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கரண்ட் கம்பத்தின் மீது மோதினார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் தலைகவசம் அணியவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகளே தலைகவசம் அணிந்து செல்லுங்கள் (தலை கவசம் உயிர் கவசம்)
Similar News
News September 17, 2025
கிருஷ்ணகிரி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <
News September 17, 2025
கிருஷ்ணகிரி: தெரு நாயால் பறிபோன உயிர்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே நாற்றம்பாளையத்தைச் சேர்ந்த மல்லப்பா கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி தெரு நாய் கடித்ததில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, இன்று (செப்டம்பர் 17) பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 17, 2025
கிருஷ்ணகிரி: தொடங்கியது புரட்டாசி! இங்கெல்லாம் போங்க

இந்த ஆண்டு புரட்டாசி மாதம் இன்று தொடங்குகிறது. இந்த மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். மேலும் இந்த மாதத்தில் விரதம் இருப்பதும், சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது என நம்பப்படுகிறது. கிருஷ்ணகிரியில் இருக்கும் சில முக்கிய பெருமாள் கோயில்
✅ சூளகிரி வரதராஜப் பெருமாள் கோயில்
✅ கனவாபட்டி வெங்கடரமண சாமி கோயில்
✅ தேன்கனிக்கோட்டை பேட்டைராய சுவாமி கோயில் (SHARE)