News May 26, 2024
வழி தவறிய குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

கரூரில் தனியார் திருமண சேவை மையம் நடத்தி வரும் சரவணன்-மோனிகா தம்பதியரின் 2 வயது குழந்தை பெரிஸ் பிளாசா வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். இதில் குழந்தை தனியாக கோவை சாலையில் வந்ததை கண்ட போக்குவரத்து காவலர்கள் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது குழந்தையை தேடிக் கொண்டிருந்த அவர்களை மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கி குழந்தையை பெற்றோரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
Similar News
News April 20, 2025
பித்தளை அண்டா ஏற்படுத்திய ரகளை: 7 பேர் மீது வழக்கு!

குளித்தலை அருகே கே.பேட்டையை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் கிருபானந்தன் பட்டவர்த்தியில் உள்ள தனது நண்பர் தாமு வீட்டில் பித்தளை அண்டா திருடி சென்றதாக அப்பகுதியை சேர்ந்தோர் சரமாரியாக அடித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போன், பைக்கை பறித்துச் சென்றுள்ளனர். சாந்தி புகாரில் செல்வா, சேது, கௌதம், அழகேசன், கோபால், துரைப்பாண்டி, விக்னேஷ் ஆகிய 7 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News April 19, 2025
ஜாக்கிரதை ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

கரூர் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
News April 19, 2025
கரூர் மின்சாரத் துறை எண்கள் !

▶️உதவி செயற்பொறியாளர் வடக்கு/கரூர்: 9445854074
▶️உதவி செயற்பொறியாளர்/ நகர்ப்புறம்/கரூர்: 04324-240988
▶️உதவி செயற்பொறியாளர் /வெள்ளியணை: 04324-281224
▶️உதவி செயற்பொறியாளர்/ அய்யர்மலை: 04323-245397
▶️உதவி செயற்பொறியாளர்/ குளித்தலை: 04323-222075
▶️உதவி செயற்பொறியாளர்/ சிந்தாமணிப்பட்டி: 04323-251246
▶️உதவி செயற்பொறியாளர்/ புகளூர்: 04324-277288
உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!