News April 25, 2025
வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக அய்யர் மலையைச் சேர்ந்த சண்முக சுந்தரத்திற்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, சண்முக சுந்தரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில், சண்முக சுந்தரம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
Similar News
News December 21, 2025
கரூருக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள்!

தமிழ்நாடு U-17 பெண்கள் பிரிவிலான SGFI, கபாடி போட்டி வருகின்ற டிசம்பர் 24-27 வரை மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ளது. அதில் தமிழக அணியில் விளையாட கரூரைச் சேர்ந்த ஶ்ரீ நிதி மற்றும் வர்ஷிகா ஆகியோர் தேர்வாகியுள்ளார். இவர்களுக்கு கரூர் மாவட்ட கபடி சங்க செயலாளர் சேதுராமன் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் பல்வேறு விளையாட்டு சங்க நிர்வாகிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
News December 21, 2025
கரூர் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

கரூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
கரூர்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

கரூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
வேலை தேடும் ஏழை இளைஞன் யாருக்காவது உதவும் இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!


