News April 25, 2025

வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

image

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக அய்யர் மலையைச் சேர்ந்த சண்முக சுந்தரத்திற்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, சண்முக சுந்தரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில், சண்முக சுந்தரம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார்

Similar News

News December 24, 2025

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளன. இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி உதவியாளர் பணித் தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு, இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக 6383050010 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News December 24, 2025

கரூர் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம்

image

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமும் இணைந்து 29.12.2025 முதல் 18.01.2026 முடிய 21 நாட்களுக்கு அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு, இலவசமாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பு சிகிச்சை 8 வது சுற்றுப் பணி அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ், கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 23, 2025

கரூர் அருகே அதிரடி கைது; போலீசார் நடவடிக்கை

image

கரூர் மாவட்டம், நங்கவரம் அருகே நச்சலூர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக பெண்ணின் தாயார் புகார் கொடுத்திருந்தார். மேலும் நங்கவரம் போலீசார் சிசிடிவி மூலமாக தேடிய நிலையில், நேற்று இரவு கடத்தி சென்ற ரஞ்சித் என்பவரை அதிரடியாக மடக்கிப்பிடித்து நங்கவரம் போலீசார் கைது செய்து பெண்ணை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!