News April 25, 2025

வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

image

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக அய்யர் மலையைச் சேர்ந்த சண்முக சுந்தரத்திற்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, சண்முக சுந்தரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில், சண்முக சுந்தரம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார்

Similar News

News January 6, 2026

கரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

கரூர் மாவட்டத்தில் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் சட்டபூர்வமான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யுமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதாக பொய்வாக்குறுதி வழங்கும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும் தகவல் அல்லது புகார் இருப்பின் 1800 599 0050 (ம) 100 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

News January 6, 2026

கரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். (பகிரவும்)

News January 6, 2026

BIG NEWS: கரூர் துயரம் விஜய் ஆஜராக வேண்டும்!

image

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட அரசியல் பரப்புரையின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கின் விசாரணைக்கு கடந்த வாரம் டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், வரும் 12-ம் தேதி விஜய் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!