News April 25, 2025
வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக அய்யர் மலையைச் சேர்ந்த சண்முக சுந்தரத்திற்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, சண்முக சுந்தரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில், சண்முக சுந்தரம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
Similar News
News January 7, 2026
கரூர்: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவு
News January 7, 2026
வாங்கல் அருகே மர்மமான முறையில் கிடந்த சடலம்!

வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 16 கால் மண்டபம் அருகே, நேற்று காலை சுமார் 10 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார்? மரணத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 7, 2026
கரூர்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

கரூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <


