News January 24, 2025
வழக்குகளை கண்டு அஞ்ச மாட்டோம்: முன்னாள் அமைச்சர்

புகழுரை அடுத்த வேலாயுதம்பாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக Ex அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள் என்பதை கண்டு அதிமுகவினர் அஞ்சமாட்டோம் என்றார். புகழூர் கதவணை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திறக்கப்படும் என தெரிவித்தார்.
Similar News
News December 1, 2025
குளித்தலை அருகே நடந்த சம்பவம்!

குளித்தலை அருகே நெய்தலூர் காலனி கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் லாட்டரி சீட்டு விற்ற முதலைப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் (31), பெரியபனையூரை சேர்ந்த ஏழுமலை (57) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்
News December 1, 2025
கரூர்: TNPSC இலவச பயிற்சி வகுப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

கரூர் வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (01.12.2025) தொடங்கின. டிசம்பர் 2025 முதல் மே 2026 வரை நடைபெறும் ஆறு மாத பயிற்சி, TNPSC Group I, II, IIA, IV தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கலந்து கொள்ள முன்பதிவு forms.gle/p4rp29kbe8PXqvet9 மூலம் செய்யலாம். மேலும் இந்த எண்ணை 63830-50010 தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
News December 1, 2025
கடவூர் பகுதியில் பைக்கில் தடுமாறி விழுந்தவர் பலி!

கடவூர், தென்னிலை அடுத்த கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் நேற்று தனது பைக்கில் திருமலைபாளையம் சாலையில் சென்றபோது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


