News February 18, 2025

வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு 

image

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளர் உதயகுமார் கடுமையாக தாக்கப்பட்டார். இதை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தியும் இன்று 18-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் கென்னடி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

Similar News

News October 17, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி நாளன்று காலை 7 முதல் 8 மணி மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 16, 2025

திண்டுக்கல் காவல்துறையின் சார்பில் எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் பல்வேறு விழிப்புணர்வு புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக (அக்டோபர் 16) இன்று “Loan App மூலம் கடன் பெறுவதை தவிர்ப்போம்” என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

News October 16, 2025

திண்டுக்கல்: கொலை வழக்கில் தாய், மகன் கைது

image

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, கூட்டாத்து அய்யம்பாளையத்தில், இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்த மருமகன் ராமச்சந்திரனை அவரது மாமனார் சந்திரன் அருவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த கொலைக்கு எதிராக ராமச்சந்திரன் உறவினர்கள் திண்டுக்கல் மருத்துவமனை முற்றுகையிட்டனர். SP உத்தரவில் தீவிர விசாரணை நடத்தி சந்திரனின் மனைவி அன்புச்செல்வி மற்றும் அவரது மகன் ரிவீன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!