News September 28, 2024
வள்ளியூரில் மாபெரும் கபடி போட்டிக்கு அழைப்பு

நெல்லை மாவட்ட வள்ளியூர் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் இரண்டாம் ஆண்டு வழக்கறிஞர்கள் பங்குபெறும் மாநில அளவிலான மாபெரும் பகல் மற்றும் இரவு கபடி போட்டி இன்று (செப்.28) மற்றும் நாளை மறுநாள் (செப்.29) வள்ளியூர் கலையரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை நெல்லை மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் நெல்லை ஏ ஆர் ரகுமான் தொடங்கி வைக்க உள்ளார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
Similar News
News December 22, 2025
நெல்லை: தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் பலி

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் கருங்குளம் எம்ஜிஆர் நகரில் உள்ள நாராயணன் மகன் கார்த்திக் என்பவர் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியது. இதில் 5 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 22, 2025
நெல்லை: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 22, 2025
நெல்லையில் கவுன்சிலர் மீது வழக்கு!

மேலப்பாளையம் பாத்திமாநகரைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட ஐ.டி. அணி செயலாளர் முகமது யாசர் அரபாத் (26), கட்சி அலுவலகத்தில் முகமது அன்சாரி (23) உள்ளிட்ட 4 பேரால் தாக்கப்பட்டார். தாக்குதலுகுட்பட்ட அவர் முகநூலில் வீடியோ வெளியிட்டு காப்பாற்றுங்கள் என கோரினார். அன்சாரியை போலீஸார் கைது செய்தனர். கவுன்சிலர் ரசூல் மைதீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


