News December 6, 2024
வள்ளியூரில் போலீஸாரை ஏமாற்றிய கைதி மதுரையில் கைது

திசையன்விளையைச் சோ்ந்த சுடலைக்கண்ணு, பொக்லைன் ஓட்டுநரை சாதி ரீதியாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததால், தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு அழைத்து வரும் வழியில் சுடலைக்கண்ணு, தப்பி சென்றுவிட்டாா். அவா் மதுரையில் பதுங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, தனிப்படை போலீஸாா், சுடலைக்கண்ணுவை புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
மதுரை: சகோதரியின் வீட்டை அடித்து நொறுக்கிய முதியவர்கள்

மதுரை அருகே காஞ்சரம் பேட்டையை சேர்ந்த பஞ்சவர்ணம்(56), அவரது வீட்டின் அருகே ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு வீடு கட்டி கொண்டிருந்தார். அங்கு வந்த அவரது சகோதரர் முத்துமாயி(70), பழனியம்மாள்(60) ஆகியோர் சேர்ந்து அந்த இடம் தனக்கு தந்தை கொடுத்ததாக கூறி பஞ்சவர்ணத்துடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை அடித்து நொறுக்கினர். புகாரின் பேரில் எம்.சத்திரப்பட்டி போலீசார் இருவரையும் இன்று கைது செய்தனர்.
News November 28, 2025
மதுரை: மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

மதுரை அருகே தென்னூரை சேர்ந்தவர் வீரபத்திரன் (50 ). இவர் கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலாளி. வடக்கு வெளி வீதியில் பள்ளி ஒன்றில் கட்டிடப் பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அவர் 2வது மாடியில் சாரத்தில் நின்றபடி கம்பி கட்டிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
மதுரை: மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

மதுரை அருகே தென்னூரை சேர்ந்தவர் வீரபத்திரன் (50 ). இவர் கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலாளி. வடக்கு வெளி வீதியில் பள்ளி ஒன்றில் கட்டிடப் பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அவர் 2வது மாடியில் சாரத்தில் நின்றபடி கம்பி கட்டிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


