News December 6, 2024

வள்ளியூரில் போலீஸாரை ஏமாற்றிய கைதி மதுரையில் கைது

image

திசையன்விளையைச் சோ்ந்த சுடலைக்கண்ணு, பொக்லைன் ஓட்டுநரை சாதி ரீதியாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததால், தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு அழைத்து வரும் வழியில் சுடலைக்கண்ணு, தப்பி சென்றுவிட்டாா். அவா் மதுரையில் பதுங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, தனிப்படை போலீஸாா், சுடலைக்கண்ணுவை புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

மதுரை: 100% SIR நிறைவு – அலுவலர்களுக்கு பாராட்டு

image

இன்று (24.11.2025) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் இ.ஆ.ப., வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை 100% நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.

News November 24, 2025

மதுரை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, சேலம் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News November 24, 2025

மதுரை அருகே செப்டிக் டேங்கிற்குள் விழுந்த பசு மாடு மீட்பு

image

மேலூர் மதுரை சாலையில், செக்போஸ்ட் அருகே அரசு கலைக் கல்லூரியில் உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த வளாகத்தில், போதிய சுற்று சுவர் இல்லாததால் வெளி நபர்கள் மற்றும் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்க்குள் பசுமாடு ஒன்று விழுந்தது. தகவல் அறிந்த மேலூர் தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

error: Content is protected !!