News December 6, 2024
வள்ளியூரில் போலீஸாரை ஏமாற்றிய கைதி மதுரையில் கைது

திசையன்விளையைச் சோ்ந்த சுடலைக்கண்ணு, பொக்லைன் ஓட்டுநரை சாதி ரீதியாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததால், தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு அழைத்து வரும் வழியில் சுடலைக்கண்ணு, தப்பி சென்றுவிட்டாா். அவா் மதுரையில் பதுங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, தனிப்படை போலீஸாா், சுடலைக்கண்ணுவை புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
மதுரை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

மதுரை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0452-2531159 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News December 4, 2025
மதுரை: மயங்கி கிடந்தவரை மீட்டவர் விபத்தில் பரிதாப பலி

புதுக்கோட்டை அறந்தாங்கி சேர்ந்த லோகேஸ்வரன் 28. மெடிக்கல் கம்பெனி விற்பனை பிரதிநிதி. தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவருடன் நத்தம் நெடுஞ்சாலை கடவூர் அழகர்கோவில் மலை ரோட்டில் காரில் சென்ற போது, சாலை ஓரத்தில் அடிபட்டு கிடந்தவரை மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தார். பின்னர் சாலையைக் கடந்த போது திடீர்னு வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே லோகேஸ்வரன் உயிரிழந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 4, 2025
மதுரையில் கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக மதுரையில் 1000-த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இங்கே <


