News December 6, 2024
வள்ளியூரில் போலீஸாரை ஏமாற்றிய கைதி மதுரையில் கைது

திசையன்விளையைச் சோ்ந்த சுடலைக்கண்ணு, பொக்லைன் ஓட்டுநரை சாதி ரீதியாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததால், தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு அழைத்து வரும் வழியில் சுடலைக்கண்ணு, தப்பி சென்றுவிட்டாா். அவா் மதுரையில் பதுங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, தனிப்படை போலீஸாா், சுடலைக்கண்ணுவை புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 7, 2025
மதுரைக்கு இன்று மஞ்சள் ஆலர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.7) மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் ஆலர்ட் விடுக்கபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
News November 7, 2025
மதுரை: பெண் பிள்ளைகள் திட்டம் ரூ.50,000 பெற இது முக்கியம்!

மதுரை மக்களே பெண் குழந்தைகள் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 50,000 வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
குழந்தை பிறப்புச் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
பாஸ்போர்ட் புகைப்படம்
இத்துடன் உங்க மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க.
தொடர்புக்கு: 0452 – 2580259 மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.
News November 7, 2025
மதுரை: ரேஷன் அட்டையில் குறைகளை தீர்க்க நாளை முகாம்

மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் தொடர்பான குறைதீர்க்கும் முகாம், நவம்பர் 8-ஆம் தேதி நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலங்களில் நடைபெறும் இந்த முகாமில், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பிற குறைகள் தொடர்பான மனுக்களை மக்கள் அளித்து தீர்வு பெறலாம்.


