News December 31, 2024
வளர்ச்சி பணிகள் கண்காணிப்புக்குழு கூட்டம்

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மகளிர் உரிமைத்தொகை, வீட்டுமனைப்பட்டா, தார் சாலை வசதி போன்ற குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News November 22, 2025
அந்தியூரில் பெண்ணிடம் பணம் பறித்த இருவர் கைது!

அந்தியூர் கொல்லம்பாளையம் சுரேஷ் என்பவர் மனைவியிடம் திருவண்ணாமலையை சேர்ந்த பிரியங்கா,செல்வத்துரை ஆகிய இருவர், குழந்தை பிறக்கும் மாத்திரை என கொடுத்துள்ளனர். மாத்திரை சாப்பிட்ட சுரேஷின் மனைவி மயக்கம் அடைந்த நிலையில் இருவரும் அவரிடம் இருந்த ரூ.25000 பணத்தை எடுத்து தப்பி விட்டனர். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியங்கா,செல்வத்துரை ஆகிய இருவர் கைது செய்தனர்.
News November 22, 2025
ஈரோடு: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று 21-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடைபெற்றது. இதில் விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகளை மனுக்களாக பெற்ற, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News November 22, 2025
ஈரோடு: போலி டிஜிட்டல் திருமண அழைப்பிதழ் மோசடி!

ஈரோடு காவல்துறை சார்பாக அறிவுரை அழைப்பிதழ்களை வாட்ஸ்அப்பில் கோப்புகளாக மக்களுக்கு அனுப்புகின்றனர். இது போன்ற கோப்புகளை பதிவிறக்குவதன் மூலம் உங்கள் மொபைலில் மால்வேர் வைரஸைக் கொண்டு வருகின்றனர். பின்னர் சைபர் குற்றவாளிகள் உங்களின் அனைத்து தகவல்களையும் திருடுகின்றனர்.தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் திருமண அழைப்பிதழ் வந்தால், அதை கிளிக் செய்ய வேண்டாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுரை!


