News September 13, 2024
வர்த்தக சங்க பொன்விழா மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் வருகின்ற 29ஆம் தேதி பொன்விழா ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. வர்த்தக சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் பொன்விழா ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து அவருக்கு சால்வை வழங்கி மரியாதை செலுத்தினார்கள். வர்த்த சங்க செயலாளர் பொருளாளர் நிர்வாகிகள் உடன் இருந்தன.
Similar News
News November 15, 2025
புதுகை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

புதுக்கோட்டை மாவட்ட கீரனூரைச் சேர்ந்தவர் சரவண குமார் (28). கூலி தொழிலாளியான இவர் 17 வயது பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் தாயார், இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் சரவணகுமாரை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
News November 15, 2025
புதுகை: மாவட்ட அளவிலான போட்டிக்கு கலெக்டர் அழைப்பு!

உலக மாற்றுத்திறனாளி தனத்தை முன்னிட்டு, புதுகை மாவட்டத்தில் நவ.21 மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 10 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் வண்ணம் தீட்டும் கோள் பயன்படுத்தியும், 11 முதல் 18 வயது வரை வாட்டர் வண்ணம் போட்டியும், 18 மேற்பட்டவர்கள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி வண்ணம் தீட்டலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவம்பர் 14) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


