News April 8, 2025
வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் கூட்டம்

திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார். வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். *விவசாயிகளுக்கு பகிரவும்*
Similar News
News July 11, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் ரத்து

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் தற்காலிகமாக ஜூலை 15 முதல் செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் அறிக்கையின் மூலமாக தெரிவித்தார்.
News July 11, 2025
44.5 கோடி ரூபாய் கையாடல் மேலாளர் தற்கொலை

புழல் பிரிட்டானியா நகர் திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன் பொல்லினேனி (37) மூன்று வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார் அவர் 44.5 கோடி ரூபாய் கையாடல் செய்து விட்டதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக நிறுவன சட்ட ஆலோசகர்கள் கொளத்தூர் காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நவீன் நேற்று தூக்கிட்டு உயிரிழந்ததால் புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News July 10, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் 99 தேர்வு மையங்கள்

தேர்வு-தொகுதி IV பதவிகளுக்கான தேர்வு 12.07.2025 முற்பகல் நடைபெறவுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் 99 தேர்வு மையங்களில் உள்ள 126 தேர்வு கூடங்களில் 38,117 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேலும், தேர்வில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதியும் பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்றுநபர் தனி அறைகள் கொண்ட வசதியும் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தகவல்.