News August 27, 2024
வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்.
Similar News
News January 9, 2026
செங்கல்பட்டில் பிறந்த பிரபலங்களாக இவர்கள்…

✅ வஹீதா ரஹ்மான் – இந்தியாவின் புகழ் பெற்ற நடிகை
✅ நாசர் – புகழ் பெற்ற தமிழ் நடிகர்
✅ C.V ஸ்ரீதர் – புகழ்பெற்ற இயக்குனர்
✅ சுல்தான் பக்ஷ் – முதல் சுதந்திரப் போரின் போது ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்த புரட்சியாளர்
✅ ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி – ராணுவத் தளபதி (1986 – 1988)
✅ ஒவி அழககேசன் – செங்கல்பட்டின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்
உங்களுக்கு தெரிந்த பிரபலங்களை ஷேர் பண்ணுங்க!
News January 9, 2026
இ.சி.ஆர்., சாலையில் போக்குவரத்து தடை

சென்னை – பாண்டிச்சேரி ஈ.சி.ஆர்., சாலையில் வரும் 11-ந்தேதி “அயர்ன் மேன் 5150 டிரையத்லான் – சென்னை இம்பேக்ட்” எனும் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனால் வரும் ஜன.10-ந்தேதி இரவு முதல் மறுநாள் மதியம் வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவளம் முதல் சூளேரிக்காடு வரை போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் பயன திட்டத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 9, 2026
செங்கல்பட்டு வாக்காளர்கள் கவனத்திற்கு…

செங்கல்பட்டு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


