News August 27, 2024
வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்.
Similar News
News January 11, 2026
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ALERT!

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.11) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!
News January 11, 2026
செங்கல்பட்டு: துடிதுடித்து பலி!

செங்கல்பட்டு அடுத்த வல்லத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ரூபாவதி (56), நேற்று முன்தினம் இரவு நெம்மேலி பகுதியில் செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது , அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ரூபாவதி சம்பவ இடத்திலேயே பலியானார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் தப்பியோடிய வாகனத்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News January 11, 2026
செங்கல்பட்டில் கோர விபத்து

மதுராந்தகம் அருகே புளிபுரக்கோவில் பகுதியில் கூலி வேலைக்குச் செல்லும் சின்னப்பொண்ணு (72) என்பவரது குடிசையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இதில், அங்கிருந்த அவரது பேரன் திவேஷ் (15) உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். வாய் பேச முடியாத மற்றும் பார்வையற்ற மாற்றத்திறனாளியான அச்சிறுவன் தீயிலிருந்து தப்பிக்க முடியாமல் போனது சோகத்தை ஏற்படுத்தியது.


