News August 27, 2024
வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்.
Similar News
News December 16, 2025
செங்கல்பட்டு: 20 மான்கள் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி இல்லாததால், மான்கள் அடிக்கடி வெளியேறி விபத்துகளில் சிக்குகின்றன. நடப்பாண்டில் மட்டும், வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டும் 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காடுகளுக்குள் நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதால், மான்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.
News December 16, 2025
செங்கல்பட்டு: 20 மான்கள் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி இல்லாததால், மான்கள் அடிக்கடி வெளியேறி விபத்துகளில் சிக்குகின்றன. நடப்பாண்டில் மட்டும், வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டும் 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காடுகளுக்குள் நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதால், மான்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.
News December 16, 2025
செங்கல்பட்டு: ஆசிரியர் வீட்டில் 14 சவரன் நகை திருட்டு!

செங்கல்பட்டு பள்ளிக்குட தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் . இவர் சிங்கபெருமாள் கோவில், திருக்கச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். நேற்று இரவு இவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


