News August 27, 2024

வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும்

image

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்.

Similar News

News January 11, 2026

செங்கல்பட்டில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

செங்கல்பட்டில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 11, 2026

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ALERT!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.11) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!

News January 11, 2026

செங்கல்பட்டு: துடிதுடித்து பலி!

image

செங்கல்பட்டு அடுத்த வல்லத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ரூபாவதி (56), நேற்று முன்தினம் இரவு நெம்மேலி பகுதியில் செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது , அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ரூபாவதி சம்பவ இடத்திலேயே பலியானார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் தப்பியோடிய வாகனத்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!