News August 27, 2024

வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும்

image

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்.

Similar News

News December 31, 2025

திருக்கழுகுன்றத்தில் நாளை திருப்படி உற்சவ விழா

image

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டின் தொடக்க நாளான நாளை காலை 9 மணிக்கு திருப்பதி உற்சவ விழா மேளதாளங்களுடன் ஓதுவார் குழுக்களுடன் திருமுறைகள் பாடப்பட்டு உற்சவ விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கு பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News December 31, 2025

செங்கை: மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News December 31, 2025

செங்கை: காவல் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

image

தமிழக காவல்துறையில் முக்கிய அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையராக A. அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்; அங்கு பணியாற்றிய அபின் தினேஷ் மோடக் சிஐடி அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டார். R. தினகரன் வண்டலூர் போலீஸ் அகாடமி ஏடிஜிபியாகவும், மகேஸ்வரி ஐஜியாகவும், செந்தில்குமார் ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!