News August 27, 2024
வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு வாடகை வீட்டுக்கு போறீங்களா?

செங்கல்பட்டு வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் SHARE
News December 8, 2025
FLASH: செங்கல்பட்டு- இருவருக்கு அரிவாள் வெட்டு!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் நேற்று செய்யூரை சேர்ந்த தினேஷ், செம்பியத்தை சேர்ந்த அப்துல் ரஹிம் ஆகியோர் டாஸ்மாக் அருகே நின்றுகொண்டிருந்தனர். அப்போது பெண்களுடன் வந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுங்களால் இருவரையும் தாக்கியுள்ளனர்.மேலும் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
News December 8, 2025
செங்கல்பட்டு: ரயிலில் பொருட்களை தொலைத்து விட்டீர்களா…?

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்கள் தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம் இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் <


