News August 27, 2024
வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்.
Similar News
News November 13, 2025
செங்கல்பட்டு: கார் கட்டத்தில் ஒருவர் கைது

திருப்போரூர், தையூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த தரணிகுமார் (40) என்பவரது வீட்டில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர், கேளம்பாக்கம், சாத்தங்குப்பத்தைச் சேர்ந்த முகேஷ் (30). கடந்த 8ஆம் தேதி, காரைச் சுத்தம் செய்வதாகக் கூறி எடுத்துச் சென்ற முகேஷ், திரும்ப வரவில்லை. தரணிகுமார் அளித்த புகாரின் பேரில், முகேஷின் மொபைல் சிக்னலை வைத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அவரைக் கைது செய்ததுடன், காரையும் மீட்டனர்.
News November 13, 2025
செங்கல்பட்டு: பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

திருக்கழுக்குன்றம் கானகோவில்பேட்டையைச் சேர்ந்த பவித்ரா (25) நேற்று காலை 6:30 மணியளவில், கிரிவலப் பாதையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அவர் அணிந்திருந்த 6 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து பவித்ரா அளித்த புகாரின்பேரில், திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சங்கிலியைப் பறித்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News November 13, 2025
செங்கல்பட்டில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் நேற்று நவ (12 ) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


