News August 24, 2024
வரும் 28ஆம் தேதி பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் ஆறு யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு வரும் 25ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது. முதல் நாள் ஒரு கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து இரு நாட்கள் இரு யாக சாலை பூஜைககள் நடைபெற உள்ளது.
Similar News
News January 7, 2026
காஞ்சிபுரம்: சம்பவ இடத்துலயே துடிதுடித்து பலி!

காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையைச் சேர்ந்த விவசாயக் கூலி ஜெகதீசன் (35) மற்றும் அவரது நண்பர் வெங்கடேசன் (35) ஆகியோர், கறவை மாடு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது செவிலிமேடு புறவழிச்சாலையில் தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News January 7, 2026
காஞ்சிபுரம்: சாலையில் நடந்த கோர விபத்து

காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கேபிள் ஆபரேட்டர் தொழில் செய்யும் இவருக்கு மனைவி & 2 பிள்ளைகள் உள்ளனர். கார்த்திகேயன் காவணிபாக்கத்திலிருந்து திருமுக்கூடல் செல்லும் போது சாலவாக்கம் கூட்டோடு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லோடு டாரஸ் லாரி மீது அதிகவேகமாக மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட அவரை மீது மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.
News January 7, 2026
காஞ்சிபுரம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


