News August 24, 2024
வரும் 28ஆம் தேதி பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் ஆறு யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு வரும் 25ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது. முதல் நாள் ஒரு கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து இரு நாட்கள் இரு யாக சாலை பூஜைககள் நடைபெற உள்ளது.
Similar News
News December 21, 2025
காஞ்சிபுரம்: அடகு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை!

காஞ்சிபுரம் செங்கழுநீர் ஓடை பகுதியைச் சேர்ந்த வரதராம், உத்திரமேரூர் வெங்கச்சேரியில் நடத்தி வரும் அடகு கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். நேற்று காலை கடை திறக்க வந்தபோது, உள்ளே இருந்த 3½ பவுன் நகை மற்றும் ரூ.85,000 பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வரதராம் அளித்த புகாரின் பேரில், மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 21, 2025
காஞ்சி: கஞ்சா விற்பனையில் 4பேர் அதிரடி கைது!

காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வையாவூர் சாலையில் நடத்திய அதிரடி சோதனையில், வண்டலூர் மற்றும் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களைக் கைது செய்தனர். வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சா அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன், விக்னேஸ்வரன், பாஸ்கரன் மற்றும் பிரசன்னா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 21, 2025
காஞ்சி: வேன் மோதி வாலிபர் பலி!

உத்திரமேரூர் அருகே குப்பையநல்லூரைச் சேர்ந்த அமல்ராஜ் (35), நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தனியார் பள்ளி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. பட்டஞ்சேரி பகுதியில் நடந்த இவ்விபத்தில் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


