News October 23, 2024
வரும் 25ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காலை 10:30 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும், தெரிவித்து பயன்பெறலாம், என, மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News September 18, 2025
செங்கல்பட்டு: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? செம்ம ஈஸி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
செங்கல்பட்டில் இன்று மழை வெளுக்கும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளத்தக்க வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
செங்கல்பட்டு: கோழி திருடியதை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு

சூணாம்பேடு பகுதியைச் சேர்ந்த நாகப்பன்(46) கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வசித்து வருகிறார். அதே வளாகத்தில் வசித்து வரும் விஜய்(25) என்ற நரிக்குறவர், சூணாம்பேடு காலனி பகுதியில் இருந்து கோழியை திருடி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது விஜய், அருகே இருந்த அரிவாளால் நாகப்பனின் தலையில் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த நாகப்பன், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.