News April 4, 2025

வரி செலுத்தாத வீடுகளுக்கு சீல்

image

குற்றாலம் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வசூலிக்கப்பட்டு இந்நிலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இறுதி நாள் 31.03.2025 ஆகும் 31.03.2025 வரை காத்திருந்தும் சொத்து வரித்தொகை ரூபாய் 6,20,626/-நிலுவை இருந்ததில் சொத்து வரி செலுத்தாத நபர்களின் வீடுகளில் சீல் வைக்கப்பட்டது. குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Similar News

News November 16, 2025

தென்காசி மக்களே இந்த இடங்களை NOTE பண்ணுங்க

image

தென்காசி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) முகாம் இன்றும் (நவ. 16) நடைபெறுகிறது. இலஞ்சி தேவர் சமுதாய நலக்கூடம், மேலகரம் டவுன் பஞ்சாயத்து நலக்கூடம், தென்காசி எம்.கே.வி.கே. கல்யாண மண்டபம், தென்காசி முப்புடாதி அம்மன் கோவில் திருமண மண்டபம், பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடம், கீழசுரண்டை ஸ்ரீ குறிஞ்சி மஹால் உள்ளிட்ட இடங்களில் SIR முகாம்கள் இன்று நடைபெறும். SHARE

News November 16, 2025

புளியங்குடியில் நாளை மாபெரும் இலவச மருத்துவ முகாம்

image

புளியங்குடியில் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமுமுக மருத்துவ அணி, சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவம் முகாம் நாளை (16.11.25) காலை 9 மணி முதல் 2 மணி வரை காயிதே மில்லத் பள்ளியில் நடைபெறும். 26வது வார்டு தலைவர் பரூக், தலைமையில் மமக கட்சி நகர செயலாளர் முகைதீன் அப்துல் காதர் துவக்கி வைக்கிறார். பொது மருத்துவம் நோயாளிகளுக்கு வழங்கப்படும். ஷேர்

News November 16, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (15.11.25) இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம். காவல்துறை கட்டுப்பாட்டு தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!