News November 28, 2024
வயநாடு மாணவர்களுக்கு உதவி

கூடலூரில் உள்ள சேவாலயம் அறக்கட்டளை சார்பில், கேரளா வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, தன்னார்வ அமைப்பின் சார்பில் இலவச சைக்கிள், ‘லேப்டாப்’ வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முரளிதரன் தலைமை வகித்தார். 20 மாணவர்களுக்கு சைக்கிள், மூன்று மாணவர்களுக்கு ‘லேப்டாப்’ மற்றும் கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
Similar News
News December 10, 2025
நீலகிரி: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

நீலகிரி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News December 10, 2025
நீலகிரி: ரூ.56,900 சம்பளத்தில் வேலை! APPLY NOW

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த <
News December 10, 2025
நீலகிரியில் வாட்டி வதைக்கும் குளிர்!

நீலகிரி: ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில், காலை முதல் மாலை வரை வெயிலான காலநிலை நிலவுகிறது. எனினும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு மிகவும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த கடும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிவதுடன், ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.


