News August 2, 2024
வன சோதனை சாவடி திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம், கடையம், தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நிர்வாக காரணத்திற்காக மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று (02/08/24)அதிகாலை முதல் அந்த தடையை நீக்கியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு செல்கின்றனர்.
Similar News
News December 13, 2025
தென்காசி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

தென்காசி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.!
News December 13, 2025
தென்காசி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் (9445000478, 9342595660) புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News December 13, 2025
தென்காசி: மதுபோதையால் தீ விபத்து.. தொழிலாளி பலி

திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழிலாளியான இவர் சில தினங்களுக்கு முன் மது போதையில் வீட்டில் கேஸ் அடுப்பு பற்ற வைக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக அவரது வேட்டியில் தீ பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த பாலமுருகன் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதமாக உயிரிழந்தார்.


