News August 2, 2024
வன சோதனை சாவடி திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம், கடையம், தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நிர்வாக காரணத்திற்காக மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று (02/08/24)அதிகாலை முதல் அந்த தடையை நீக்கியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு செல்கின்றனர்.
Similar News
News January 5, 2026
தென்காசி: EMI – ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்ற…
1. இங்கு <
2. வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க.
3. சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும்.
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News January 5, 2026
தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 5, 2026
சங்கரன்கோவிலில் திடீர் போக்குவரத்து மாற்றம்

சங்கரன்கோவில் – ராஜபாளையம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடை பெறுகிறது. எனவே இன்று (ஜன.5) இரவு முதல் நாளை (ஜன.6) காலை வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து ராஜபாளையம், ஸ்ரீவி., கம்பம், குமுளி செல்லும் வாகனங்கள் புளியங்குடி, அச்சம்பட்டி வழியாக செல்லவும், ஸ்ரீவி. ராஜபாளையம் வரும் வாகனங்கள் களப்பாகுளம் வழியாக சங்கரன்கோவில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


