News August 2, 2024
வன சோதனை சாவடி திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம், கடையம், தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நிர்வாக காரணத்திற்காக மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று (02/08/24)அதிகாலை முதல் அந்த தடையை நீக்கியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு செல்கின்றனர்.
Similar News
News December 7, 2025
தென்காசி: மகளிர் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

தென்காசி மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <
News December 7, 2025
தென்காசி: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
தென்காசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கடையம் அருகே காசிவிஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவர் நேற்று தனது வீட்டு மாடுகளை கட்டிவிட்டு வருகையில் கால் வழுக்கி அருகில் இருந்த கம்பியை பிடித்துள்ளார். அதில் மின்கசிவு இருந்த காரணத்தால் மின்சாரம் தாக்கியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை G.H-க்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இசக்கிமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு.


