News August 2, 2024
வன சோதனை சாவடி திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம், கடையம், தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நிர்வாக காரணத்திற்காக மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று (02/08/24)அதிகாலை முதல் அந்த தடையை நீக்கியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு செல்கின்றனர்.
Similar News
News December 24, 2025
தென்காசி மாவட்டத்தில் மாடு வளர்போர் கவனத்திற்கு!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பபூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது வருகிற 29.12.2025 முதல் 18.01.2026 வரை 21 நாட்களுக்கு தென்காசி மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 24, 2025
தென்காசி: ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் ஔவையார் விருது வழங்கப்படவுள்ளதால், இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.12.2025 ஆகும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.
News December 24, 2025
தென்காசி: தோட்டத்தில் பூச்சி மருந்து தெளித்தவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த முனிராஜ் இவர் விவசாயத் தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுவாச குழாய் வழியாக மருந்து சென்று வயிற்று வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


