News August 2, 2024
வன சோதனை சாவடி திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம், கடையம், தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நிர்வாக காரணத்திற்காக மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று (02/08/24)அதிகாலை முதல் அந்த தடையை நீக்கியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு செல்கின்றனர்.
Similar News
News October 26, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில், இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
News October 26, 2025
நெட்டூர் தென் பழனி ஆண்டவர் கோவிலில் சூரசம்காரம்

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் நெட்டூர் ஊராட்சி தென் பழனி ஆண்டவர் திருக்கோவிலில் (அக்.27) நாளை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது அதிகாலை நாலு மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறவுள்ளது. ஒன்பது மணிக்கு மேல் பால்குடம் தீர்த்தம் எடுத்து வருதல் மதியம் அன்னதானம் மாலை 5 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 28ஆம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பு. *SHARE IT
News October 26, 2025
தென்காசி: B.Eக்கு அரசு வேலை தயார்!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!


