News August 2, 2024

வன சோதனை சாவடி திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி

image

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம், கடையம், தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நிர்வாக காரணத்திற்காக மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று (02/08/24)அதிகாலை முதல் அந்த தடையை நீக்கியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு செல்கின்றனர்.

Similar News

News December 12, 2025

தென்காசி: SIR-ல் பெயர் இருக்கா? இல்லையா? CHECK பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, நீங்கள் நிரப்பி கொடுத்த SIR படிவத்தில் 2026 வாக்காளர் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை உங்க போனில் பார்க்க வழி உள்ளது.
1.<>இங்கு க்ளிக்<<>> செய்து LOGIN பண்ணுங்க.
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்யுங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையென்றால் உங்கள் BLO அதிகாரியை தொடர்புகொள்ளுங்க. SHARE பண்ணுங்க

News December 12, 2025

தென்காசி: பஸ் மோதி விவசாயி பலி

image

புளியங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி முருகையா (60). இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் ஊருக்கு திரும்பி வருகையில், சங்கரன்கோவில் ரோட்டில் எதிரே வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை GH-ல் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 12, 2025

தென்காசி: டிச.16ல் இறுதி பட்டியல்.. கலெக்டர் அறிவிப்பு!

image

தென்காசி மாவட்டத்தில் கடந்த நவ.4ம் தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) வரைவு வாக்காளர் பட்டியல், வரும் டிச.16ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை பொருத்தவரையில் 89% பணிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.

error: Content is protected !!