News August 2, 2024

வன சோதனை சாவடி திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி

image

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம், கடையம், தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நிர்வாக காரணத்திற்காக மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று (02/08/24)அதிகாலை முதல் அந்த தடையை நீக்கியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு செல்கின்றனர்.

Similar News

News December 13, 2025

தென்காசி: வக்கீல் கொலையில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை

image

தென்காசியில் கடந்த 3ஆம் தேதி முத்துக்குமாரசாமி (46) என்ற வழக்கறிஞர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவசுப்பிரமணியனை (48) தேடி தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 4ம் தேதி நாமக்கல் ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். இதில் தற்கொலை செய்து கொண்டவர் சிவசுப்பிரமணியன் என தெரியவந்தது. அவரது உறவினா்கள் நேரில் உறுதிப்படுத்திய பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

News December 13, 2025

தென்காசி: மாணவிகள் கவனத்திற்கு.., கவலை வேண்டாம்

image

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஏராளமான மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு மாணவிகளுக்கு சிலர் இடையூறு செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிவகிரி போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாணவிகள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாணவிகளுக்கு எவரேனும் தொந்தரவு அளித்தால் அவர்களிடமோ, காவல் நிலையத்திலோ புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News December 12, 2025

கடையம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

image

கடையம் அருகே மாதாபுரம் தோரணமலை பகுதியைச் சேர்ந்த ஐயன் கண்ணு என்ற தங்கப்பாண்டி இன்று ராமநதி அணைக்கு செல்லும் வழியில் தனது தோட்டத்தில் பீஸ் கேரியரை எடுத்து மாட்டிய போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!