News August 2, 2024

வன சோதனை சாவடி திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி

image

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம், கடையம், தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நிர்வாக காரணத்திற்காக மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று (02/08/24)அதிகாலை முதல் அந்த தடையை நீக்கியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு செல்கின்றனர்.

Similar News

News December 10, 2025

தென்காசி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News December 10, 2025

தென்காசியில் 190 பேர் கைது

image

தென்னாசி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்மாநில அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் கூட்டமைப்பு சாபிளில், நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் பூரணம் தலைமை வகித்தார். அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் உதவியாளர்கள் வேண்டும், கோடை விடுமுறை ஒரு மாதம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீடிரென தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்ட 190 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News December 10, 2025

தென்காசி: கம்மி விலையில் கார், பைக் வேணுமா??

image

ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 18.12.2025ம் தேதி காலை 09 மணி முதல் மதியம் 03 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 94884-88933, 78688-61828 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!