News January 1, 2025
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 180 பேருக்கு தீருதவித் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 180 பேருக்கு ரூ.2.37 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த 28 நபா்களின் வாரிசுதாரா்களில் 11 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 17 பேருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
விழுப்புரம்: வளர்ப்பு நாயால் முதியவருக்கு கொலை மிரட்டல்!

விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணா தேவநாதன். இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி இவரது நாய் பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் பற்குணன், கிருஷ்ண தேவநாதனை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 3, 2025
விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஒட்டிய நபர் – தட்டி தூக்கிய போலீஸ்!

விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிவேகமாக பைக் ஓட்டிய பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அதிவேகமாக யாராவது பைக் ஓட்டுகின்றனரா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
News December 3, 2025
விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஒட்டிய நபர் – தட்டி தூக்கிய போலீஸ்!

விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிவேகமாக பைக் ஓட்டிய பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அதிவேகமாக யாராவது பைக் ஓட்டுகின்றனரா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.


