News April 3, 2025

வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது நடவடிக்கை – வனத்துறையினர்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மலைப்பகுதிகளில் அப்போது காட்டு தீ ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதிக்குள் அனுமதி இன்றி யாரும் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறு அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News April 12, 2025

தேனி:டாக்டரிடம் பழகி திருமணம் செய்து ரூ.9.69 லட்சம் மோசடி

image

தேனியை சேர்ந்தவர் நரேந்திர பிரசாத் 28. டாக்டரான இவர் சென்னையில் பணி செய்கிறார். இவரிடம் முகநுாலில் ஈரோட்டை சேர்ந்த நந்தினி என்பர் பழகினர். பின்பு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். நந்தினி சமூக வலைதளங்களில் பல ஆண்களுடன் பேசினார். இதனை தட்டி கேட்ட நரேந்திர பிரசாத்தை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும் ரூ.9.69 லட்சம் வரை மிரட்டி வாங்கியுள்ளா். நந்தினி உட்பட 4 பேர் மீது வழக்கு

News April 11, 2025

தேனி : SSLC படித்தவர்களுக்கு அரசு வேலை

image

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் 106 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வியடைந்த 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டும் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து ஏப்ரல் 26க்குள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு ஷேர் செய்து உதவலாமே…

News April 11, 2025

தேனி அரசு ஐ.டி.ஐ.யில் அப்ரண்டிஸ் பயிற்சி

image

தேனி அரசு ஐ.டி.ஐ.யில் ஏப்ரல்15 அன்று அப்ரண்டிஸ் பயிற்சிக்கு சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இதில் அரசு, தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இம்முகாமில் 8,10ம் வகுப்பு, +2 கல்வித்தகுதி, ஐ.டி.ஐ.களில் படித்து தேர்ச்சி பெற்ற, தேர்ச்சியடையாதவர்கள், அதற்கு மேல் படித்தவர்கள் பங்கேற்கலாம். 6 மாதம் அடிப்படை பயிற்சி, ஓராண்டு அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று சான்றிதழ் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!