News August 26, 2024
வந்தவாசி அருகே 14 சவரன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி தெய்யார் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சாந்தி என்பவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, பீரோவில் இருந்த 14 சவரன் தங்க நகைகளை திருடுபோனது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
தி.மலையில் பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் வேலு

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு (நவ.28) திருவண்ணாமலை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய்த்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் கருணை அடிப்படையில் சமையலர், சமையல் உதவியாளர், சத்துணவு அமைப்பாளர், அலுவலக உதவியாளர், சாலை பணியாளர், உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
News November 28, 2025
புதிய செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சர்

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு, திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக காவல் நிலையம், பேருந்து நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை Mobile App (நவ.28) இன்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது கலெக்டர் தர்ப்பகராஜ் உடனிருந்தார்.
News November 28, 2025
தி.மலை: AIRPORT-ல் வேலை! APPLY NOW

தி.மலை மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 -ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் <


