News August 26, 2024
வந்தவாசி அருகே 14 சவரன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி தெய்யார் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சாந்தி என்பவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, பீரோவில் இருந்த 14 சவரன் தங்க நகைகளை திருடுபோனது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
தி.மலை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தி.மலை மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
தி.மலை: முதலாளி வீட்டில் கைவரிசை காட்டியவர் கைது!

வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் சசிகுமார் வீட்டில் வைத்திருந்த மகனின் திருமணத்திற்கான 13½ பவுன் நகை சேர்த்து வைத்திருந்தார். திடிரென்று நகை காணாமல் போனதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சந்தேகத்தின் பெயரில் கடை ஊழியரும், சசிகுமார் வீட்டில் தங்கி இருந்தவருமான அருண்குமாரை போலீசார் விசாரித்தனர்.இந்த விசாரணையில் அவர் நகையை திருடியது உறுதியானதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
News December 13, 2025
தி.மலை: நிலத்தகராற்றில் விவசாயி நாக்கு கடித்து அறுப்பு!

விநாயகபுரத்தை சேர்ந்த விவசாயி ஜோதிபிரகாஷ் தனது நிலத்தில் வரப்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர், நிலத்தகராறு காரணமாக ஜோதிபிரகாஷை மண்வெட்டியால் தாக்கி, அவரது நாக்கைக் கடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த ஜோதிபிரகாஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பெயரில் சங்கீதாவை கைது செய்தனர்.


