News August 26, 2024
வந்தவாசி அருகே 14 சவரன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி தெய்யார் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சாந்தி என்பவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, பீரோவில் இருந்த 14 சவரன் தங்க நகைகளை திருடுபோனது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
தி.மலை: டிகிரி முடித்தவரா நீங்கள்? SBI-ல் வேலை ரெடி!

1. SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித்தகுதி: எதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஜன.02. நல்ல வாய்ப்பு, மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
தி.மலை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் எண்கள்

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. தி.மலை DSP-04175-232619, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090/22321085, TOLL FREE NO-1064, தி.மலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-9894599260. யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News December 27, 2025
செங்கம் : முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்.

செங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் எ.வ.வேலுவிற்கும் அப்பகுதி பொதுமக்கள் இன்று தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். புதிய கட்டட வசதி மூலம் அப்பகுதி மாணவர்களின் உயர்கல்வித் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


