News May 15, 2024

வந்தவாசியில் போலீசாரை தாக்கிய வழக்கறிஞர் கைது

image

தி.மலை, வந்தவாசி அடுத்த சேதாரம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சென்னையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வந்தவாசி தெற்கு போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் ராமு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு தரப்பிற்கு ஆதரவாக பாலமுருகன் போலீசாரிடம் தகராறு செய்தார். பின்னர் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News July 9, 2025

வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள் (2/2)

image

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்.

News July 9, 2025

வேலையில்லாதவர்களுக்கு ரூ.12,000 உதவித்தொகை (1/2)

image

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு (044-22500107 & 04175233333). <<17003500>>தொடர்ச்சி<<>>

News July 9, 2025

தி.மலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் தொகுதி-4 தோ்வுக்காக தி.மலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேற்று (ஜூலை 08) செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, உதவி இயக்குநா் (நில அளவை) சண்முகம், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!