News May 15, 2024

வந்தவாசியில் போலீசாரை தாக்கிய வழக்கறிஞர் கைது

image

தி.மலை, வந்தவாசி அடுத்த சேதாரம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சென்னையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வந்தவாசி தெற்கு போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் ராமு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு தரப்பிற்கு ஆதரவாக பாலமுருகன் போலீசாரிடம் தகராறு செய்தார். பின்னர் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News September 18, 2025

தி.மலையில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 18, 2025

தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 17.09.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

image

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் சமூக நீதி உறுதிமொழியை ஏற்றனர். அனைவரும் சமூக நீதியை நிலைநாட்டவும், சாதி, மத, இன பாகுபாடுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் உறுதி பூண்டனர்.

error: Content is protected !!