News October 23, 2024

வத்திராயிருப்பு அருகே டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்

image

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் இருந்து மதுரைக்கு சென்ற தனியார் பஸ்சில் பெரியகருப்பன் என்பவர் ஏறி படியில் நின்று கொண்டு இடையூறு செய்ததை கண்டக்டர் ரஞ்சித்குமார் கண்டித்துள்ளார். இதனையடுத்து, முத்துக்குமார், பெரியகருப்பன், சிவா உள்ளிட்ட சிலர் பஸ்சிற்குள் ஏறி கண்டக்டர் மற்றும் டிரைவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Similar News

News November 3, 2025

சாத்தூர்: கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி

image

வெம்பக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (63). கூலி தொழிலாளியான இவர் அருகில் உள்ள கோட்டை கண்மாயில் குளித்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய உறவினர்கள் தேடி வந்தனர். இதற்கிடையில் அவர் கண்மாயில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 3, 2025

விருதுநகர்: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News November 3, 2025

சாத்தூர் காராச்சேவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுமா?

image

சாத்தூர் என்றாலே பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது காராச்சேவு மற்றும் வெள்ளரிக்காய் தான். சாத்தூர் காராசேவு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. நூறாண்டுகளை கடந்த இந்த காராசேவுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!