News August 2, 2024

வத்தலக்குண்டு ஆலமரத்திற்கு கும்பாபிஷேகம்

image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியில் மிகப் பழமையான ஆலமரம் உள்ளது. மரத்தின் அடியில் ஓடை முனியாண்டி கோயிலும் உள்ளது. இந்த ஆலமரத்திற்கு, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்று யாக வேள்விகள் தொடங்கப்பட்டு புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் ஆலமரத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 1, 2026

திண்டுக்கல் வீடு கட்ட ரூ.2.50 லட்சம்: விண்ணப்பிப்பது எப்படி?

image

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க<> pmay-urban.gov.in<<>> என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள்அருகே உள்ள இ சேவை மையத்தில் பதிவு செய்யலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News January 1, 2026

பழனி வசமாக சிக்கிய பெண் சிறையில் அடைப்பு!

image

பழனி சின்ன கலையம்புத்தூரை சேர்ந்தவர் கார்த்திக்கேயன். இவரின் மனைவி பிரேமலதா. இருவரும் பழனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சரவணமுத்து, முத்துக்குமார், ரமனேஷ் ஆகிய 4 பேரிடம் மின்சாரம், பொதுப்பணி, கல்வித்துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 27 லட்ச ரூபாயை பெற்று கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு பிரேமலதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 1, 2026

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.31) சமூக வலைதளங்களில் பல போலியான பெயர்களில் மோசடி நபர்கள் வலம் வருகின்றனர். அவர்களின் வலையில் சிக்கி உங்கள் பணத்தை இழக்க வேண்டாம். எச்சரிக்கை.! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!