News August 2, 2024
வத்தலக்குண்டு ஆலமரத்திற்கு கும்பாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியில் மிகப் பழமையான ஆலமரம் உள்ளது. மரத்தின் அடியில் ஓடை முனியாண்டி கோயிலும் உள்ளது. இந்த ஆலமரத்திற்கு, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்று யாக வேள்விகள் தொடங்கப்பட்டு புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் ஆலமரத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 2, 2025
கொடைக்கானலில் பெண்ணால் பரபரப்பு!

கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண், நடமாடும் மருத்துவ வாகனம் மற்றும் அருகே இருந்த 8-க்கும் மேற்பட்ட வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிடித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News December 2, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

உங்கள் ரகசியங்களை உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். வங்கி தொடர்பான விஷயங்களை யாரிடமும் பகிர வேண்டாம். உங்கள் அலைபேசி எண்ணிற்கு வரும் OTP கடவுச்சொல் Password ஆகியவற்றை அறிமுகமில்லாத நபர்களிடம் கூற கூடாது. இதன் மூலம், குற்றவாளிகள் இணையதளம் வாயிலாக உங்களது வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
News December 2, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

உங்கள் ரகசியங்களை உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். வங்கி தொடர்பான விஷயங்களை யாரிடமும் பகிர வேண்டாம். உங்கள் அலைபேசி எண்ணிற்கு வரும் OTP கடவுச்சொல் Password ஆகியவற்றை அறிமுகமில்லாத நபர்களிடம் கூற கூடாது. இதன் மூலம், குற்றவாளிகள் இணையதளம் வாயிலாக உங்களது வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.


