News August 17, 2024

வதந்தி: திருப்பூர் கலெக்டர் ஆபிசில் குவிந்த பெண்கள்

image

தமிழக அரசின் சார்பில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று முதல் மீண்டும் விடுபட்ட பெண்களுக்கு மனுக்கள் வழங்கப்படுவதாக தகவல் பரவியது. இதனை நம்பி ஏராளமான பெண்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News November 20, 2025

வெளிமாநில தொழிலாளர் விவரங்கள் கணக்கெடுப்பு!

image

அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்வதற்காக, https://labour.tn.gov.in/ism என்கிற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளரை பணி அமர்த்தியுள்ள நிறுவனங்கள், இந்த இணையதளம் வாயிலாகவும், தொழிலாளர் நலத்துறை வாயிலாகவும் விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்தார்.

News November 20, 2025

திருப்பூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News November 20, 2025

பல்லடத்தில் நடந்த அதிர்ச்சி – 4 பேர் கைது

image

பல்லடம், பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி நித்யா (30), கலெக்‌ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். கே.என்.புரம் லட்சுமி மில் பகுதியில் 9 லட்சம் ரூபாய் பணத்தை மொபட்டில் கொண்டு சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பறித்து சென்றது. பல்லடம் போலீசார் புகாரின் பேரில் விசாரணையில் பல்லடத்தைச் சேர்ந்த பிரகாஷ் (36), பிரவீன்குமார் (30), பாலாஜி (22), லெனின்குமார் (22) ஆகிய நால்வரை கைது செய்தனர்.

error: Content is protected !!