News April 2, 2025
வணிக நிறுவனங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். அதேபோல உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் விதிமுறைகளுக்குட்பட்டு தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். மே.15ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அபராதம் விதிக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 21, 2025
கோவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News November 21, 2025
கோவை மாணவி கூட்டு பாலியல் வழக்கு: 3 பேரின் காவல் நீட்டிப்பு!

கோவை விமான நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி இரவு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், கைதான 3 பேருக்கும் விதிக்கப்பட்ட 14 நாட்கள் நீதிமன்ற காவல் நேற்றோடு முடிவடைந்த நிலையில், அவர்கள் மூவருக்கும் வரும் டிசம்பர் 3-ந்தேதி வரை நீட்டித்து கோவை மாவட்ட நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News November 21, 2025
மேட்டுப்பாளையம் அருகே பயங்கர விபத்து!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கூலி தொழிலாளியான இவர் இன்று தனது டூவீலரில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்றுள்ளார். அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அசுர வேகத்தில் சென்ற பிக்கப் வாகனம் மோத்தேபாளையம் அருகே சென்ற போது சிவக்குமாரின் டூவீலர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


