News February 16, 2025
வணிகர் சங்க பேரமைப்பின் மாநில நிர்வாகி நியமனம்

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச் செயலாளராக காயல்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் காயல் அகமது சாஹிபு என்பவரை மாநில தலைவர் ரவி நியமித்து அறிவித்துள்ளார். அவருக்கு மண்டல தலைவர் கோடீஸ்வரன், தெற்கு மாவட்ட தலைவர் வேலாயுத பெருமாள் மற்றும் பேரமைப்பின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 1, 2025
கோவில்பட்டியில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்

விருதுநகர் பரங்கிநாதபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (65), உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு, கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.
News December 1, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் குளிர் பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘டித்வா’ புயல் காரணமாக நவம்பர் 27 முதல் சனிக்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை இல்லாத ஞாயிற்றுக்கிழமை இரவில், வெப்பநிலை சுமார் 22 டிகிரிக்கு குறைந்ததால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. கடல் அமைதியாகக் காணப்பட்டது.
News November 30, 2025
தூத்துக்குடி: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட மக்களே, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.


