News September 28, 2024

வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த ஆட்சியர்

image

வேதாரண்யம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது திடீரென வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் பதிவேடுகள் பராமரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு அரசு அலுவலர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று ஊழியர்களிடம் குறைகள் கேட்டறிந்து பொதுமக்களிடம் கனிவாக நடந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.

Similar News

News July 11, 2025

நாகை கடற்கரையில் நாய்கள் கண்காட்சி அறிவிப்பு – கலெக்டர்

image

நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நாய்கள் கண்காட்சி வரும் ஜூலை 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பங்குபெறும் சிறந்த நாய்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7500, மூன்றாம் பரிசாக ரூ.5000 என வழங்கப்பட உள்ளது. எனவே இந்நிகழ்வில் செல்ல பிராணிகள் வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW !

News July 10, 2025

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி; ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாத இறுதி வரை நடக்கிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள முன் கள பணியாளர்கள் தங்கள் பகுதிக்கு வரும் போது அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News July 10, 2025

நாகை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய பணம்

image

நாகை மாவட்டம் பால்பண்ணைசேரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணம் கைமாறுவதாக நாகை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1.59 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அங்கு உள்ள அனைத்து அறைகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!