News September 28, 2024

வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த ஆட்சியர்

image

வேதாரண்யம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது திடீரென வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் பதிவேடுகள் பராமரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு அரசு அலுவலர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று ஊழியர்களிடம் குறைகள் கேட்டறிந்து பொதுமக்களிடம் கனிவாக நடந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.

Similar News

News December 7, 2025

நாகை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>udyamimitra.in <<>>என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

நாகை : அழுகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள்

image

நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்கள் வயல்களில் அழுகி சேதமடைந்த நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி, உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத்தினர் வந்தனர். சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்டதாகவும், முழுமையான நிவாரணம் வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

News December 7, 2025

நாகை: அரசு ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு

image

திருக்குவளையை சேர்ந்த ராதா மின்வாரிய அலுவலகத்தில் கமர்சியல் ஆய்வாளரான இவர் பைக்கில் பின்னால் அமர்ந்து மேலப்பிடாகைலிருந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் ராதா அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை அறுத்து கொண்டு தப்பி சென்றனர். இதையடுத்து ராதா அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீஸ் விசாரணையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஏங்கள்ஸ், பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!