News September 28, 2024
வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த ஆட்சியர்

வேதாரண்யம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது திடீரென வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் பதிவேடுகள் பராமரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு அரசு அலுவலர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று ஊழியர்களிடம் குறைகள் கேட்டறிந்து பொதுமக்களிடம் கனிவாக நடந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.
Similar News
News December 1, 2025
நாகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலவிய ‘டிட்வா’ புயல் தற்போது சென்னைக்கு அருகே வலுவிழந்து மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.1) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News December 1, 2025
நாகப்பட்டினம்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (நவ.30) இரவு பத்து மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்
News December 1, 2025
நாகப்பட்டினம்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (நவ.30) இரவு பத்து மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்


