News September 28, 2024
வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த ஆட்சியர்

வேதாரண்யம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது திடீரென வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் பதிவேடுகள் பராமரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு அரசு அலுவலர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று ஊழியர்களிடம் குறைகள் கேட்டறிந்து பொதுமக்களிடம் கனிவாக நடந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.
Similar News
News August 9, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே மணக்குடி வையாபுரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று பேருக்கு தலா ரூ.14500 வீதம் ரூ 34500 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
News August 9, 2025
நாகையில் துறைமுகம் மேம்படுத்துதல் குறித்த கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகை துறைமுகம் சம்பந்தமான கூட்டம், இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மேரி டேம் போர்டு சேர்மன் தலைமையில் நடைபெற்றது. இதில், இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில், தலைவர், செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நாகை துறைமுகத்தை 4 மீட்டர் ஆழப்படுத்தி, சாகர்மாலா திட்ட கீழ் சிறிய கப்பல் கையாள்வதற்கு குறித்தும் அலோசிக்கப்பட்டது.
News August 9, 2025
நாகை: பெற்றோர்கள் கவனத்திற்கு! இதை தெரிஞ்சிக்கோங்க!

நாகை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!