News September 28, 2024
வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த ஆட்சியர்

வேதாரண்யம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது திடீரென வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் பதிவேடுகள் பராமரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு அரசு அலுவலர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று ஊழியர்களிடம் குறைகள் கேட்டறிந்து பொதுமக்களிடம் கனிவாக நடந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.
Similar News
News November 24, 2025
நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா 469வது கந்தூரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நவ.30 இரவு புறப்பட்டு டிச.1ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் னிகழ்வு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு டிச.1 தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தும், விடுமுறையை ஈடுசெய்ய டிச.13ம் தேதி பணி நாளாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 24, 2025
நாகைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன
News November 24, 2025
நாகை: நெற்பயிர்களை சூழ்ந்த மழைநீர்

கீழ்வேளூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கீழ்வேளூர், வடகரை, கோகூர், ஆணைமங்கலம். வங்காரமாவடி, ஒர்குடி, கடம்பன்குடி, பெருங்கடம்பனூர் உள்ளிட்ட சுற்றுபுற பகுதிகளில் உள்ள சம்பா தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


