News February 18, 2025
வடமதுரை அருகே பயங்கர வெடிச்சத்தம்

திண்டுக்கல், வேடசந்தூர் தாலுகா, வடமதுரையில் இன்று 18.02.2024 காலை 11:30 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து வடமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் லேசான அதிர்வு உணரப்பட்டது. இந்த பயங்கர வெடி சத்தம் மற்றும் அதிர்வு கடந்த சில வருடங்களாக இந்த பகுதியில் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 5, 2025
திண்டுக்கல்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 5, 2025
திண்டுக்கல்: கேஸ் புக்கிங் செய்ய வந்தது மாற்றம்!

திண்டுக்கல் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ்: https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 5, 2025
பழனி அருகே தூக்கிட்டு இளைஞர் தற்கொலை!

பழனி அருகே சின்ன கலயமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது தரணீஸ்வரன் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுகிறார். ஆனால் நோய் குணமடையாததால் மன அழுத்தம் அதிகரித்து, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். நெய்காரப்பட்டி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்து உடனடியாக சம்பவ இடத்தில் சென்று, அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.


