News November 22, 2024
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி தீவிரம்

சிவகங்கை மாவட்டத்தில் வட கிழக்கு மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சல், தொற்று நோய் தடுப்பதற்கான சுகாதார பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
சிவகங்கை: போலீசிடமே நகை, பணம் திருட்டு

திருப்புவனத்தைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தவள்ளி. இவர் திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருப்புவனத்திலிருந்து மானாமதுரைக்கு பேருந்தில் வந்தாா்.அப்போது அவா் தனது கைப் பையை பாா்த்தபோது அது திறக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகைகள், ரூ 10 ஆயிரம், கைப்பேசி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மானாமதுரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனர்.
News November 24, 2025
சிவகங்கை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 24, 2025
சிவகங்கை: பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள் கைது

கீழக்குளம் கிராமம் அருகே உள்ள அடர்த்தியான மற்றும் முள்ளான காட்டு பகுதியில், ஒரு history sheeter பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பல history sheeters கூடியிருந்தார்கள். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 40 பேர் கொண்ட சிறப்பு போலீஸ் குழு முற்றுகையிட்டு இருவரை கைது செய்ததோடு 2 வாள்கள், 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் சில சந்தேகப்பொருட்கள் பறிமுதல் செய்தது. தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.


