News August 2, 2024
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை 2024 முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இ.ஆ.ப., தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் பங்கேற்றனர்.
Similar News
News November 8, 2025
விழுப்புரம்: தொழிலாளியிடம் ரூ.1 லட்சம் கொள்ளை

திருவெண்ணெய்நல்லூர் வட்டம், திருமுண்டீச்சரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ம.ஜெயச்சந்திரன். சுமை வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவர், கடந்த வியாழக்கிழமை முற்பகலில் அங்குள்ள வங்கியில் அடமானம் வைத்த தனது நகைகளை மீட்பதற்காக ரூ.1 லட்சம் பணத்துடன் சென்றுள்ளார். வங்கி அலுவலர்கள் அடுத்த வாரம் வருமாறு கூறியதால் வீடு திரும்பிய அவர், வாகனத்தில் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
News November 8, 2025
விழுப்புரம்: காவலர் பணி தேர்வர்கள் கவனத்திற்கு

விழுப்புரம் மாவட்டத்தில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை(நவ.09) நடைபெற உள்ள தேர்வில் 10,859 பேர் பங்கேற்கவுள்ளனர். இதுகுறித்து பேசிய மாவட்ட எஸ்.பி சரவணன், ‘தேர்வாளர்கள் காலை 8 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். 9:30 மணிக்குமேல் தேர்வு எழுத வரும் நபர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை. எலக்ட்ரானிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
விழுப்புரம்: பட்டாவில் பெயர் சேர்க்கனுமா? எளிய வழிமுறை

1) விழுப்புரம் மக்களே.., உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
2)இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது.
3)இதற்கு <
4) உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


