News March 6, 2025

வங்கி கணக்கில் பணம் மாயம்

image

திருப்பூரில் எஸ்பிஐ வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை மாயமானதாக புகார் கூறப்படுகிறது. இதனையடுத்து வங்கியில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News March 6, 2025

மாவட்ட தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை

image

திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் தங்கள் பாஸ்போர்ட் தொடர்பான பணிக்காக கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்று வந்தனர். இந்த நிலையில், இதனை தவிர்க்கும் வகையில் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் திருப்பூர் ரயில் நிலையம் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தில் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 6, 2025

திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் வரும் 8ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண உள்ளார்கள் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News March 6, 2025

திருப்பூர் தொழிலதிபரிடம் 41 லட்சம் மோசடி

image

திருப்பூர் மங்கலம் சாலையை சேர்ந்த தொழிலதிபரிடம் கடந்த 18ஆம் தேதி வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் பங்குச்சந்தை வர்த்தகம் குறித்து கூறி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி லிங்க் ஒன்றை அனுப்பி உள்ளார். இதில் இணைந்த தொழிலதிபர் 41 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து சைபர் குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!