News April 18, 2025
வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஆனந்தி (30) தனியார் வங்கியில் பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் தி.மலை பே.கோபுரம் தெருவில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல)
Similar News
News July 11, 2025
தி.மலை- ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு ரயில்

திருவண்ணாமலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு நேற்று (ஜூலை 10) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. இது ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திர பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில், தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
News July 11, 2025
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

நேற்று ஜூலை-10ந் தேதி முதல் செப்டம்பர் மாத இறுதிவரை மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு பணி நடைபெறும். இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவர்களது முழுவிபரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்குவதற்கான பணி தொடங்கவுள்ளது. இதில் சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் (CSPs) முன்களப்பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
திருவண்ணாமலை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகளின் விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10/07/2025 இரவு 10 மணி முதல் 11/07/2025 காலை 06 மணி வரை இரவு ரோந்துக்கு தாலுக்கா வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உங்கள் தாலுக்கா அதிகாரி அழைக்கலாம் மற்றும் 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.