News April 18, 2025

வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

image

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஆனந்தி (30) தனியார் வங்கியில் பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் தி.மலை பே.கோபுரம் தெருவில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல)

Similar News

News November 28, 2025

தி.மலை: தீபத்துக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தி.மலை கார்த்திகை மகா தீபம் டிச.3ல் நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில், அரசு பிரத்யேக மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், தற்காலிக பேருந்து நிறுத்தம், கார் பார்க்கிங், குடிநீர் வசதி, மருத்துவ முகாம், கழிவறைகள், ஆம்புலன்ஸ் வசதி எங்குள்ளது என தெரிந்துகொள்ளலாம். இந்த <>லிங்க் <<>>மூலம் டவுன்லோடு செய்து, தீபத்தன்று கிரிவலம் செல்ல நினைப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 28, 2025

தி.மலை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம் <<>>மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News November 28, 2025

தி.மலையில் பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் வேலு

image

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு (நவ.28) திருவண்ணாமலை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய்த்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் கருணை அடிப்படையில் சமையலர், சமையல் உதவியாளர், சத்துணவு அமைப்பாளர், அலுவலக உதவியாளர், சாலை பணியாளர், உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

error: Content is protected !!