News April 18, 2025
வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஆனந்தி (30) தனியார் வங்கியில் பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் தி.மலை பே.கோபுரம் தெருவில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல)
Similar News
News December 13, 2025
தி.மலையில் இன்று ரேஷன் குறை தீர்வு முகாம்

தி.மலை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் இன்று (டிசம்பர்-13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிமை பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும். இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை புதுப்பித்தல் பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம் முகவரி மாற்றம் நகல் அட்டை சேவை தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 13, 2025
தி.மலை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<
News December 13, 2025
தி.மலை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தி.மலை மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


