News August 25, 2024
வங்கிகளின் SMS இனி வராது?

டிராய் உத்தரவால், வங்கிகள், நிதி நிறுவனங்கள், இ-காமெர்ஸ் நிறுவன SMS-கள் அடுத்த மாதம் முதல் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. மோசடியை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் URL, OTT லிங்குகள் கொண்ட SMS-களை செப்.1 முதல் தடுக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆக.31க்குள் மொபைல் நிறுவனங்களிடம் வங்கிகள், நிதிநிறுவனங்கள் பதிய வேண்டும். இல்லையேல் அதன் SMSகள் வாடிக்கையாளர்களுக்கு செல்லாது.
Similar News
News July 8, 2025
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்: இபிஎஸ்

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வந்து சேரவிருப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் வாக்கிங் சென்று மக்களிடம் பரப்புரை செய்த இபிஸ், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்று, தேர்தல் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த அவர், கூட்டணியில் பல ரகசியங்கள் இருப்பதாகவும், சூழலுக்கு தகுந்தார்போல் பல கட்சிகள் வந்து சேரும் என்றார்.
News July 8, 2025
தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடு: TRB ராஜா

இந்தியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகக் கூறி, அமைச்சர் TRB ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் 2 & 3-வது இடங்களில் குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன. 4-வது இடத்தை கர்நாடகா & டெல்லி ஆகியவை பகிர்ந்து கொள்கின்றன.
News July 8, 2025
ஆகாஷ் போட்டுடைத்துவிட்டார்.. எமோஷனலான அக்கா

ஆகாஷ் ஒரு எமோஷனலில் பொதுவெளியில் போட்டுடைத்துவிட்டார் என்று அவரது அக்கா கூறியுள்ளார். இங்கி.,க்கு எதிரான டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிறகு, தனது அக்கா கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ச்சிபொங்க பேசினார் ஆகாஷ் தீப். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அவரது அக்கா, தீப் என் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறி நெகிழ்ந்துள்ளார்.