News August 25, 2024
வங்கிகளின் SMS இனி வராது?

டிராய் உத்தரவால், வங்கிகள், நிதி நிறுவனங்கள், இ-காமெர்ஸ் நிறுவன SMS-கள் அடுத்த மாதம் முதல் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. மோசடியை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் URL, OTT லிங்குகள் கொண்ட SMS-களை செப்.1 முதல் தடுக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆக.31க்குள் மொபைல் நிறுவனங்களிடம் வங்கிகள், நிதிநிறுவனங்கள் பதிய வேண்டும். இல்லையேல் அதன் SMSகள் வாடிக்கையாளர்களுக்கு செல்லாது.
Similar News
News September 16, 2025
விஜய் கட்சிக்கு விரைவில் END: வைகைச் செல்வன்

தவெகவை சனிக்கிழமை கட்சி என்று அதிமுகவின் வைகைச் செல்வன் விமர்சித்துள்ளார். எப்படி ஐடி ஊழியர்கள் வீக் எண்டில் எங்காவது ஜாலியாக சென்று வருவார்களோ, அதுமாதிரியான Weekend கட்சி தான் விஜய்யின் கட்சி என்று அவர் கூறியுள்ளார். அக்கட்சி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே செயல்படும் கட்சி என்றும், அது விரைவிலேயே END கட்சி ஆகிவிடும் எனவும் அவர் கிண்டலாக பேசியுள்ளார்.
News September 16, 2025
அடமானம் இல்லாமல் ₹20 லட்சம் வரை கடன் தரும் திட்டம்

ஏழை எளியோரும் தொழில் தொடங்கி, தொழில்முனைவோராக மாற ₹20 லட்சம் வரை எந்த பிணையமும் இல்லாமல் கடன் வழங்குகிறது முத்ரா கடன் திட்டம். இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தினால் போதும். அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று இந்த திட்டத்தின் பலனை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள https://www.mudra.org.in/ -ஐ தளத்தை பார்வையிடுங்கள். SHARE.
News September 16, 2025
மேகாலயாவில் 8 அமைச்சர்கள் ராஜினாமா

மேகாலயா அமைச்சரவையில் மாற்றம் நிகழவுள்ளதால் அதற்கு ஏதுவாக, 8 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அம்மாநிலத்தின் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சரவையில், 8 புதிய அமைச்சர்கள் ராஜ் பவனில் மாலை 5 மணிக்கு பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட்ட அமைச்சர்கள் கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.