News August 25, 2024
வங்கிகளின் SMS இனி வராது?

டிராய் உத்தரவால், வங்கிகள், நிதி நிறுவனங்கள், இ-காமெர்ஸ் நிறுவன SMS-கள் அடுத்த மாதம் முதல் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. மோசடியை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் URL, OTT லிங்குகள் கொண்ட SMS-களை செப்.1 முதல் தடுக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆக.31க்குள் மொபைல் நிறுவனங்களிடம் வங்கிகள், நிதிநிறுவனங்கள் பதிய வேண்டும். இல்லையேல் அதன் SMSகள் வாடிக்கையாளர்களுக்கு செல்லாது.
Similar News
News November 21, 2025
இளையராஜா போட்டோக்களை பயன்படுத்த தடை

இளையராஜாவின் புகைப்படங்களை SM-ல் பயன்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் மியூசிக் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது பெயர், புகைப்படம், இசைஞானி என்ற பட்டம் என எதையும் பயன்படுத்தக்கூடாது என்ற இளையராஜாவின் முறையீடு ஏற்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
Sports Roundup: கால்பந்து தரவரிசையில் இந்தியா சறுக்கல்

*சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா 142-வது இடத்திற்கு சறுக்கல். * நவ.27-ம் தேதி நடைபெறவுள்ள WPL கிரிக்கெட் ஏலத்திற்கு 277 வீராங்கனைகள் பதிவு. *ஆஷஸ் வரலாற்றில் 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் இடது கை பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார். *டி20-ல் 19 முறை ஆட்டநாயகன் விருது வென்று சிகந்தர் ராசா சாதனை. *ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில், லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்
News November 21, 2025
ஒரு நாள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

விடுமுறை இல்லாமல் SIR பணிகளை மேற்கொள்ளும் BLO-க்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதால் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, கேரளா, மேற்கு வங்கத்தில் BLO-க்கள் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால், பணிச்சுமையைக் குறைக்க MGNREGA பணியாளர்களை உதவிக்கு பயன்படுத்தி கொள்ளவும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. SIR பணிகளை முடிக்க டிச.4-ம் தேதி கடைசி நாளாகும்.


