News August 25, 2024
வங்கிகளின் SMS இனி வராது?

டிராய் உத்தரவால், வங்கிகள், நிதி நிறுவனங்கள், இ-காமெர்ஸ் நிறுவன SMS-கள் அடுத்த மாதம் முதல் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. மோசடியை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் URL, OTT லிங்குகள் கொண்ட SMS-களை செப்.1 முதல் தடுக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆக.31க்குள் மொபைல் நிறுவனங்களிடம் வங்கிகள், நிதிநிறுவனங்கள் பதிய வேண்டும். இல்லையேல் அதன் SMSகள் வாடிக்கையாளர்களுக்கு செல்லாது.
Similar News
News November 20, 2025
தமிழ்நாட்டில் வசூலை அள்ளிய பிற மொழி படங்கள்

தமிழ் படங்களை கடந்து பிற மொழி படங்களுக்கும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதில், சில திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ஹிட் அடித்ததுடன், அதிக வசூலையும் அள்ளி குவிந்துள்ளன. அவை என்னென்ன படங்கள், எவ்வளவு வசூல் செய்துள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களை ஆச்சரியப்படுத்திய படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE
News November 20, 2025
நேற்று முளைத்த காளான் (விஜய்): பிரேமலதா

நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் ஆட்சியமைக்க ஆசைப்படுகின்றன என்று விஜய்யை பிரேமலதா மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் விரும்பும் கூட்டணியாக தான் தேமுதிக 2026 தேர்தலில் வெற்றி பெறும் என்றும் கூறினார். சமீப காலமாக, பிரேமலதா, விஜய பிரபாகரன் ஆகியோர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருவது அரசியல் கவனம் பெற்றுள்ளது.
News November 20, 2025
திருமணமான பெண்ணுடன் உறவு பலாத்காரம் ஆகாது: HC

திருமணமான பெண்ணுடன் உறவில் இருந்துவிட்டு, பின்னர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தால் அது பலாத்காரம் ஆகாது என்று கேரள HC தெரிவித்துள்ளது. கணவர், 2 குழந்தைகள் இருந்தபோதே வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்த பெண் ஒருவர், கணவர் இறந்த பிறகும் தொடர்பில் இருந்துள்ளார். தற்போது அந்த நபர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால், பலாத்கார வழக்கு தொடர்ந்த நிலையில், கோர்ட் இவ்வாறு கூறியுள்ளது. உங்கள் கருத்து என்ன?


