News August 25, 2024
வங்கிகளின் SMS இனி வராது?

டிராய் உத்தரவால், வங்கிகள், நிதி நிறுவனங்கள், இ-காமெர்ஸ் நிறுவன SMS-கள் அடுத்த மாதம் முதல் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. மோசடியை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் URL, OTT லிங்குகள் கொண்ட SMS-களை செப்.1 முதல் தடுக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆக.31க்குள் மொபைல் நிறுவனங்களிடம் வங்கிகள், நிதிநிறுவனங்கள் பதிய வேண்டும். இல்லையேல் அதன் SMSகள் வாடிக்கையாளர்களுக்கு செல்லாது.
Similar News
News November 23, 2025
3 ஆண்டுகள் தூங்கும் உயிரினம் எது தெரியுமா?

கடல் நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். சுற்றுச்சூழல் மாற்றங்கள், உணவு பற்றாக்குறை போன்ற காலகட்டங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ள வருடக்கணக்கில் இவை தூங்குகின்றனவாம். இதன் மூலம், அவை உணவில்லாமலும் நீண்ட நாள்கள் வாழ முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 23, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி.. முடிவை அறிவித்தார்

NDA கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்பதை விஜய் உறுதிப்படுத்தியுள்ளார். கரூர் துயருக்கு பிறகு அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தவெகவின் கொள்கை எதிரி (பாஜக) யார் என்பதை தெளிவாக சொல்லிய பிறகே களத்திற்கு வந்துள்ளதாகவும், அதில் எந்தவித ஊசலாட்டமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் இன்றைய பேச்சில் BJP-ஐ விஜய் விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 23, 2025
பாடம் கற்றுக்கொண்ட விஜய்

கரூர் துயரிலிருந்து விஜய் பாடம் கற்றுக்கொண்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அத்துயருக்கு விஜய் தாமதமாக சென்றதே காரணம் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இன்றைய நிகழ்ச்சிக்கு விஜய் 30 நிமிடங்கள் முன்பாகவே வந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தையுடன் சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. யாரும் சோர்வடையாமல் இருக்க உணவும் தரப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் தொண்டர் படை ஈடுபட்டிருந்தனர்.


