News April 15, 2025
வக்கீலுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்குப்பதிவு

பெருந்தரக்குடியைச் சேர்ந்த வக்கீல் ஆனந்தன்(38) என்பவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன்(28). இவர் ஆனந்தன் வீட்டிற்கு அருகே தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை ஆனந்தன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், ஆனந்தனை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 4, 2025
திருவாரூர்: வட்டார கல்வி அலுவலர்கள் சந்திப்பு

திருவாரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணிபுரிந்து வரும் சௌந்தர்ராஜன் தற்போது பணி மாறுதலில் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் பணியாற்றி வரும் வட்டார கல்வி அலுவலர்கள் இணைந்து அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
News December 4, 2025
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் WAR ROOM அமைப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக வெள்ள கட்டுப்பாட்டு அறை (WAR ROOM) திறந்து வைக்கப்பட்டு 24 மணி நேரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை சம்பந்தமான முன்னெச்சரிக்கைகளை தெரிந்து கொள்ள 1077 என்ற எண்ணிற்கு எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 4, 2025
திருவாரூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

திருவாரூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <


