News March 28, 2025

லேப்டாப்கள் திருட்டு: போலீசாருக்கு ஷாக்

image

செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசுப்பள்ளி கட்டிடத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய இலவச லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னலை உடைத்து லேப்டாப்கள் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசார் அதே பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவர்களே அந்த லேப்டாப்களை திருடியது தெரியவந்தது.

Similar News

News November 22, 2025

செங்கல்பட்டு: மாட்டுக்கு பாலியல் ரீதியாக தொல்லை!

image

பல்லாவரம் அருகே பசுமாட்டை மர்ம நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை வீடியோவாக எடுத்து பெண் ஒருவர் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு அனுப்பிய நிலையில், விலங்கு நல ஆர்வலர் நடத்திய ஆய்வில் அந்த நபர் மாட்டிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

News November 22, 2025

செங்கல்பட்டு: தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி & அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (நவ-22) காலை சுமார் 9.00 முதல் மாலை 3.00 வரையிலும், தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு 9499055895 / 9486870577 இந்த எண்ணில் அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News November 22, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (நவம்பர்-21) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!