News April 18, 2025

லாரி மோதி ஒருவர் பலி

image

செங்கல்பட்டு, பெரும்பேர்கண்டிகையை சேர்ந்தவர் சரவணன் (47). இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்துாரில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றார். அப்போது அச்சிறுபாக்கம் அருகே முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற போது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பலியானார். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 1, 2025

செங்கல்பட்டு காவல்துறை அறிவுரை

image

செங்கல்பட்டு காவல் துறை வலைத்தளத்தில் விழப்புணர்வு போஸ்டர் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 1. சாலையில் நடந்து செல்லும்போது கைபேசியை பயன்படுத்தாதீர், 2. குழந்தைகளின் மேல் அதிக கவனம் செலுத்துங்கள், 3. வலது மற்றும் இடது பக்கம் பார்த்து சாலையை பாதுகாப்பாக கடப்பீர் என்றும் அறிவுரை வழங்கப்பட்டதுள்ளது. இந்த சின்ன சின்ன விதியை கடைபிடித்து விபத்தில் இருந்து நம்மை பாதுகாப்போம். ஷேர் பண்ணுங்க.

News November 1, 2025

செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News November 1, 2025

செங்கல்பட்டில் மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இதில்,டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊரக வேலை உறுதி திட்டம், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், துாய்மை பாரதம், வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்றவை ஆன்லைனில் செலுத்தும் முறை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க உள்ளன.

error: Content is protected !!