News April 2, 2025
லாரி ஓட்டுநர்கள் மீது அரிவாள் வெட்டு

விழுப்புரம் – நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் நேற்று (ஏப்ரல் 1) ஒரே இரவில் 3 இடங்களில் அரிவாள் வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. லாரிகளை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த லாரி ஓட்டுநர்களை, மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றது. பைக்கில் வரும் அந்த மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 9, 2025
விழுப்புரம் மக்களே மத்திய அரசு வேலை… கடைசி வாய்ப்பு

இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை (ஆக.10)க்குள் <
News August 9, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்… கூட்டுறவு வங்கியில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் ஆக.29ஆம் தேதிக்குள் <
News August 9, 2025
இருசக்கர வாகனத்தில் வைத்த பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கல்லாலிப்பட்டு பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவர் தனது ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.95,000 திருடப்பட்டதாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வங்கியில் நகையை அடமானம் வைத்து பெற்ற ரூ. 59,000 மற்றும் வீட்டில் இருந்து எடுத்து வந்த ரூ.36,000 என மொத்தம் ரூ.95,000 திருடப்பட்டுள்ளது. செஞ்சி – தி.மலை சாலையில் உணவகத்தில் உணவருந்திய போது சம்பவம் நடந்துள்ளது.