News April 23, 2025
லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

விருதுநகர் அருகே மார்த்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவர் தனது வீட்டின் மின் மீட்டர் பெட்டியை இடமாற்றம், பெயர் மாற்றம் செய்யக்கோரி சூலக்கரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது உதவி செயற்பொறியாளர் கனகராஜ் ரூ.1000 லஞ்சம் பெற்றதாக 3.1.2012 அன்று கைது செய்யப்பட்டார். இதில் கனகராஜூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News November 14, 2025
விருதுநகர் MedPlus மருந்தகத்தில் வேலை

விருதுநகரில் உள்ள MedPlus மருந்தகத்தில் Pharmacy assistant பணியிடத்திற்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 18 முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள் ஆண்கள் தேவை.
மாத ஊதியமாக ரூ.16,000 முதல் ரூ.20,000 வரை வழஙக்கப்படும். முன்அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். 10th, 12th, எதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த மாதம் 25ம் தேதிக்குள் <
News November 14, 2025
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்

சிவகாசியில் வரும் 2026 தீபாவளி பண்டிகைக்காண பட்டாசு உற்பத்தி பணிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே துவங்கியது. ஆனால் துவக்கத்திலிருந்தே அவ்வப்போது பெய்து மழை மற்றும் கடும் குளிர் நிலவுகிறது. எனவே பட்டாசு தயாரிக்க போதிய வெப்பநிலையின்றி பட்டாசு உற்பத்தி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டாசு தட்டுப்பாட்டை போக்க முன்கூட்டியே உற்பத்தியை துவங்கிய உற்பத்தியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News November 14, 2025
JUST IN அருப்புக்கோட்டை: விபத்தில் உடல் நசுங்கி பலி

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி புரட்டாசி வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசகன்(65). இவர் இன்று (நவ.14) சீனிவாசகன் ஆத்திபட்டி பஸ் ஸ்டாப் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதி லாரி டயருக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


