News April 23, 2025
லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

விருதுநகர் அருகே மார்த்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவர் தனது வீட்டின் மின் மீட்டர் பெட்டியை இடமாற்றம், பெயர் மாற்றம் செய்யக்கோரி சூலக்கரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது உதவி செயற்பொறியாளர் கனகராஜ் ரூ.1000 லஞ்சம் பெற்றதாக 3.1.2012 அன்று கைது செய்யப்பட்டார். இதில் கனகராஜூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News September 16, 2025
விருதுநகர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025. விண்ணப்பிக்க<
News September 16, 2025
சாத்துார் அருகே விபத்தில் பெண் பலி; கணவர், குழந்தை படுகாயம்

கோவில்பட்டி பகுதியை சேர்ந்த மேசியார் தாஸ், இவர் மனைவி வனிதா, குழந்தை சஞ்சனா இவர்கள் டூவீலரில் சாத்துாரிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பிய போது சாத்துார் – கோவில்பட்டி சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் வனிதா சம்பவ இடத்தில் பலியானார். கணவரும், குழந்தையும் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
News September 16, 2025
விருதுநகர்: மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சிவகிரி வனப்பகுதி தேவியாறு அருகே 2 நாட்களுக்கு முன் காட்டுத்தீ பரவியது. வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றும் கடும் வெயில், காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. வேகமாக பரவி வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் தீயினை மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.