News April 12, 2025

லஞ்சம் வாங்கிய நகராட்சி வரிவசூலிப்பாளர் கைது

image

சிவகங்கையை சோ்ந்த கணேசன் என்பவரிடம் வீட்டுக்கு சொத்து வரி பெயா் மாற்றம் செய்ய சிவகங்கை நகராட்சி வரிவசூலிப்பாளர் பாலமுருகன் ரூ.9,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத கணேசன் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், ரசாயனப்பொடி தடவிய ரூபாயை பாலமுருகனிடம் நேற்று கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும், களவுமாக பிடித்து பாலமுருகனை கைது செய்தனர்.

Similar News

News November 22, 2025

சிவகங்கை: முனைவோர் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் அதிகாரமாக்கல் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர்கள் <>www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையம் மேலாளர், 04575-240257 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

சிவகங்கையில் கனமழை தொடரும்.!

image

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று (நவ.22) மற்றும் நாளை (நவ.23) ஆகிய தினங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 22, 2025

சிவகங்கை: ரேஷன் கடை பிரச்சனைக்கு இதோ தீர்வு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் செய்து <<>>Grievance Redressal, சிவகங்கை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!