News January 23, 2025

லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்

image

திருவள்ளூர் மாவட்டம் சத்யவேடு கூட்டுச்சாலையில் லாரியை மடக்கி பணம் வசூலித்ததாக தலைமை காவலர் கோபிநாத் மீது புகார் எழுந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை காவலர் கோபிநாத் உடன் ஊர் காவல் படையை சேர்ந்த சரவணனையும் சஸ்பெண்ட் செய்து திருவள்ளூர் எஸ்.பி ஆணை பிறப்பித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நவ.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 15, 2025

திருவள்ளூர்: ரயில்வேயில் சூப்பர் வேலை.. APPLY NOW

image

திருவள்ளுவர் மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்

News November 15, 2025

திருவள்ளூர்: பெண் வெட்டிப் படுகொலை!

image

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனியில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55) என்ற பெண் நகைக்காக நேற்றிரவு(நவ.14) சில மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் காது, கழுத்தில் இருந்த நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!