News April 8, 2025

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப்பொறியாளர் கைது

image

குடியாத்தத்தில், செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்த பணிக்கு நிலுவைத்தொகை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (ஏப்ரல் 7) கைது செய்தனர். நிலுவைத்தொகையை வழங்க தனக்கு ரூ.30,000 தர வேண்டும் என அவர் கூறியுள்ளதாக லிங்கேஸ்வரன் என்பவர் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து, உதவிப்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 19, 2025

வேலூரில் இன்ஜினியரிங் படித்தால் வேலை

image

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO – ADA), காலியாகவுள்ள பிராஜெக்ட் சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப உள்ளது. 137 காலிப்பணியிடங்கள் உள்ளன. இன்ஜினியரிங் டிகிரி, மாஸ்டர் டிகிரி, Ph.D படித்தால் போதும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.90,789 முதல் ரூ.1,08,073 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 21ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

17 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது

image

வேலூர் மாவட்டம் சம்பத் நகரைச் சேர்ந்தவர் தனுஷ் (20). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமடைந்த சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அவரின் ஆதார் அட்டையை பார்த்த டாக்டர்கள் சிறுமிக்கு 18 வயது நிரம்பாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தனுஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 19, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 18) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!