News April 9, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

Similar News

News December 21, 2025

தி.மலை: மனைவி கண் முன் கணவருக்கு நேர்ந்த சோகம்!

image

செய்யாறு அருகே விவசாயி செல்வன் (54), டிச-19 தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நேர்ந்த விபத்தில் உயிரிழந்தார். வந்தவாசி – மேல்மா கூட்டுச்சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துபோலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனைவி கண்ணெதிரே கணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 21, 2025

தி.மலை: அப்பாவை துடிதுடிக்க அடித்து கொன்ற மகன்!

image

வந்தவாசி அருகே, மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தந்தை முருகனை (55) அடித்துக் கொன்ற மகன் சரத்குமார் (34) கைது செய்யப்பட்டார். கிருஷ்ணாபுரம் கூட்டுச்சாலையில் உள்ள நிழற்குடையில் தங்கியிருந்த முருகனிடம், அவரது மகன் சரத்குமார் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். அவர் தர மறுத்ததால் கட்டையால் தாக்கியதில் முருகன் உயிரிழந்தார். வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரைச் சிறையில் அடைத்தனர்.

News December 21, 2025

தி.மலை: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை!

image

செங்கம், தோக்கவாடியை சேர்ந்த செந்தில் (எ) விக்னேஷ் (எ) சஞ்சாலன் (33) என்பவர், மூன்று பெயர்களில் அறியப்படும் ஒரே நபர். 2016ஆம் ஆண்டு ராபரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக செங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று டிச.20 நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

error: Content is protected !!