News April 29, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஏப்ரல்.29) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
Similar News
News November 14, 2025
தி.மலையில் தீவிர சோதனை!

தி.மலையில் டிச.3ஆம் தேதி மகாதீபத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் போலீசார் இன்று (நவ.14) தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் வளாகம், ராஜகோபுரம், அம்மன் தேர் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் ஆய்வு நடைபெற்று வருகிறது.
News November 14, 2025
தி.மலை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

தி.மலை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதியிலல் வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <
News November 14, 2025
தி.மலை: கலெக்டர் ஆபீசில் தீக்குளித்தவர் பலி!

தி.மலை, கலசப்பாக்கம் அடுத்த கீழ்தாமரைப்பாக்கத்தில் குமார் என்பவருக்கும் அவரது சகோதரருக்கும் நிலப்பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் குமாரும் அவரது மனைவி பூங்கொடியும் தீக்குளித்தனர். 45 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பூங்கொடி, சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.13) உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


