News February 16, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
தி.மலை: தொடரும் அவலம்; அலைக்கழிக்கப்படும் மக்கள்!

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார், சாதிச் சான்று உள்ளிட்ட சேவைகளை பழங்குடியின மக்கள் பெறும் வகையில் SC/ST நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஆதார் பெற வந்த இருளர் மக்களிடம், ஆதார் எடுக்க பிறப்பு சான்றிதழ் தேவை என கூற, ஆதார் எடுக்கவில்லை. இதனால், தங்களுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாமல் ஆதார் வழங்க கோரி, தர்ணாவில் ஈடுபட்டனர்.
News November 22, 2025
தி.மலை: அரசு பேருந்து மோதியதில் நொறுங்கிய கார்!

ராணிப்பேட்டை மாவட்ட வட்டாட்சியர்கள் அருள்செல்வன், ஆனந்தன், தமிழரசி, வெங்கடேசன் ஆகியோர் தி.மலைக்கு அலுவல் காரணமாக வந்துவிட்டு, சோளிங்கர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆரணி அருகே அரசு பேருந்து கார் மீது மோதியதில், விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த பூபாலன் பலத்த காயமடைந்தார். வட்டாட்சியர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆரணி கிராமிய போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 22, 2025
தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


