News September 13, 2024

ரேஷன் கார்டு குறைகளை களைய சிறப்பு முகாம்

image

பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் 14.09.2024 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

நாகர்கோவிலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

image

நாகர்கோவில், பள்ளவிளை கங்கானகரையை சேர்ந்த லிவினா வேலை தேடி வந்தார். நேற்று அவரது லிவினா வீட்டின் அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை.அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, லிவினா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரணை.

News December 1, 2025

குமரியில் 9 புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

image

குமரி மாவட்டத்திற்கு 9 எஸ்.ஐ.க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாடசாமி புதுக்கடை இன்ஸ்பெக்டராகவும், மதுரை கருப்பசாமி தக்கலை இன்ஸ்பெக்டராகவும், நெல்லை தமிழரசன் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டராகவும், தென்காசி மாடன் ராம்குமார் திருவட்டார் இன்ஸ்பெக்டராகவும் பதவி உயர்வுடன் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை வேலம்மாள் வடசேரி இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News November 30, 2025

சுசீந்திரம் கால பைரவர் கோவிலில் ராகு கால பூஜை

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் திருவாவடுதுறை ஆதீனம் மடம் ஶ்ரீகாலபைரவர் திருத்தலத்தில் இன்று(நவ.30) ஞாயிறு இராகு கால பூஜையை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு பால், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!