News August 4, 2024
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, கன்னியாகுமரியில் உள்ள 5,73,949 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம்.
Similar News
News December 14, 2025
குமரி: கதவை உடைத்து பீரோ, கட்டில் திருட்டு!

கள்ளியடைப்புவிளை அன்னம்மாள் (60) வீட்டில் இல்லாத போது கதவை உடைத்து அங்கிருந்த இரும்பு கட்டில், பீரோ, சேர்கள், பாத்திரங்களை நேற்று யாரோ திருடி சென்றுள்ளனர். கொல்லங்கோடு போலீசார் விசாரணையில் அப்பகுதியிலிருந்த பழைய இரும்பு கடையில் இவை விற்கப்பட்டது தெரியவந்தது. மூதாட்டியின் வீட்டு கதவை நண்பருடன் சேர்ந்து உடைத்து பொருட்களை திருடி கடையில் விற்ற கிராத்தூர் கிடாரக்குழி ஜோண்யை போலீசார் கைது செய்தனர்.
News December 14, 2025
குமரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

குமரி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 14, 2025
குமரியில் +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

தக்கலை ஆசான்கிணறு பகுதி ஜெயவேல் – மல்லிகா தம்பதியின் மூத்தமகள் நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் +2 படித்து வந்தார். பத்மநாபபுரம் அரண்மனை பகுதியில் கடை நடத்தி வரும் மல்லிகா, நேற்று மதியம் மகளுக்கு போன் செய்த போது அவர் போனை எடுக்காததால் சந்தேகத்துடன் வீட்டுக்கு வந்த போது வீடு திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மகள் மின் விசிறியில் தூக்கில் இறந்த நிலையில் காணப்பட்டார். தக்கலை போலீசார் விசாரணை.


